செய்திகள்

கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் தி.மு.க.வினர் முற்றுகை

Published On 2018-03-29 15:37 IST   |   Update On 2018-03-29 15:37:00 IST
கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக கூறி காஞ்சீபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், தி.மு.க. வினருக்கு வேட்பு மனுக்களை வழங்கவும், வாங்கவும் மறுத்து அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் தி.மு.க.வினர் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக கூறி காஞ்சீபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகத்தை காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் திமு.க.வினர் முற்றுகையிட்டனர்.

இதில் காஞ்சீபுரம் எம்.எல். ஏ. எழிலரசன், நகர செயலாளர் சன்பிராண்டு கே.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் பி.எம். குமார், பி.சேகர், சிறுவேடல் செல்வம், பேரூராட்சி செயலாளர் பாண்டியன் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News