செய்திகள்

சம்பள கணக்கு அலுவலகங்களுக்கு மார்ச் 31-ம் தேதி வேலை நாளாக கருதப்படும்- தமிழக அரசு

Published On 2018-03-28 12:42 GMT   |   Update On 2018-03-28 12:42 GMT
நிதியாண்டு மார்ச் 31-ம்தேதியுடன் முடிவடைவதால் பட்டியலை நேர்செய்வதற்காக 31-ம் தேதி அனைத்து சம்பள கணக்கு அலுவலகங்களுக்கும் வேலை நாளாக கருதப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. #TamilNaduaccountsoffices
சென்னை:

தமிழக கருவூலம் மற்றும் கணக்குத் துறை முதன்மைச் செயலர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2017-18 நிதியாண்டு 31-3-2018 அன்று முடிவுறுவதால், பட்டியல்களை நேர்செய்வதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து சம்பளக் கணக்கு அலுவலங்கள், மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார்நிலை கருவூலங்களுக்கும் 31-3-2018 அன்று சனிக்கிழமை வேலை நாளாக கருதப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews #TamilNaduaccountsoffices

Tags:    

Similar News