செய்திகள்

தாம்பரம் அருகே காதலி கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற வாலிபர்

Published On 2018-03-28 15:30 IST   |   Update On 2018-03-28 15:30:00 IST
தாம்பரம் அருகே வேறொரு வாலிபருடன் பேசிய ஆத்திரத்தில் காதலி கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தாம்பரம்:

பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சத்யபிரகாஷ். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அப்பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி விமான நிலையத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் இந்துவும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்து செல்போனில் வேறு ஒரு வாலிபருடன் பேசுவதாக சத்யபிரகாஷ் சந்தேகம் அடைந்தார். இது தொடர்பாக அவரிடம் தகராறு செய்து வந்தார்.

நேற்று இரவு மகளிர் விடுதியில் இருந்த இந்துவை வெளியே வரவழைத்த சத்யபிரகாஷ் அவரிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று தகராறு செய்த சத்யபிரகாஷ் பிளேடால் இந்துவின் கழுத்து, முதுகில் அறுத்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதை பார்த்ததும் சத்யபிரகாஷ் தப்பி ஓடிவிட்டார். இந்துவை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சத்யபிரகாசை கைது செய்தனர்.

Similar News