செய்திகள்

பள்ளியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு- விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம்

Published On 2018-03-27 14:53 IST   |   Update On 2018-03-27 14:53:00 IST
காஞ்சீபுரம் அருகே பள்ளியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் அடுத்த கோவிந்தவாடியகரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறது. பள்ளி இருந்த இடத்தில் கட்ட போதுமான இடம் இல்லை என்பதாலும், நீர்நிலை பகுதியில் உள்ளதால் பள்ளியை வேறு இடத்தில் மாற்ற முடிவு செய்து புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை போடப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

பள்ளி இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் அருகில் காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் பு.பெ.கலை வடிவன் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் ஓரிக்கை நா.வல்லரசு, காஞ்சீபுரம் மாவட்ட துணை செயலாளர் கோ.திருமா தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய செயலாளர் தன.கோபி, மண்டல செயலாளர் சூ.க. விடுதலைசெழியன், காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அ.செல் வராசு, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கவுதம், காஞ்சீபுரம் நகர செயலாளர் அ.பாலாஜி உள்பட பலர் கலந்துகொண்டனர். #Tamilnews

Similar News