செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது

Published On 2018-03-26 08:47 IST   |   Update On 2018-03-26 08:47:00 IST
கொழும்புக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் விமானங்களில் பெரும் அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்பட இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சென்னையில் இருந்து கொழும்புக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் ஏற வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த நைனார் முகமது (வயது 34) என்பவரின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் எதுவுமில்லை. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

அதில் அவரது உள்ளாடைகளில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து கொழும்புக்கு கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் நைனார் முகமதுவின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், கடத்தப்பட இருந்த வெளிநாட்டு பணம் ஹவாலா பணமா?, இந்த கடத்தல் பின்னணியில் சர்வதேச ஹவாலா கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கிறதா? என அவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  #tamilnews

Similar News