செய்திகள்

திருவள்ளூர் அருகே வேலைக்கு சென்ற 3 இளம்பெண்கள் மாயம்

Published On 2018-03-25 17:22 IST   |   Update On 2018-03-25 17:22:00 IST
திருவள்ளூர் அருகே வேலைக்கு சென்ற 3 இளம்பெண்கள் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கொசவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவனாண்டி. இவரது மகள் அர்ச்சனா (வயது 19). கடந்த 23-ந் தேதி வேலைக்கு சென்ற அர்ச்சனாவை காணவில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவரது மகள் சோனியா (19),. கடந்த 20-ந்தேதி வேலைக்கு சென்ற சோனியாவை காணவில்லை.

காவல்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகள் நதியா (22) கடந்த 22-ந் தேதி வேலைக்கு சென்ற நதியாவை காணவில்லை. இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News