செய்திகள்

காஞ்சிகோவில் அருகே வேலைக்கு சென்ற நர்சு திடீர் மாயம்

Published On 2018-03-14 17:20 IST   |   Update On 2018-03-14 17:20:00 IST
வேலைக்கு சென்ற நர்சு திடீரென மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாயமான நர்சை தேடி வருகிறார்கள்.

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் செங்காளி பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 36). பெருந்துறை சேனடோரியத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணி புரிந்து வருகிறார்.

இவரது மனைவி மகாலட்சுமி (33). பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் நர்சாக பணி புரிந்து வருகிறார். 5 வருடங்களுக்கும் மேலாக இதே மருத்துவமனையில் பணி புரிந்து வரும் இவர் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்றவர் மாலையில் வீடு திரும்ப வில்லையாம்.

இதனால் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களிலும் விசாரித்தும் தேடிப்பார்த்தும் கிடைக் காததால், வெளியூரில் உள்ள தனது உறவினர்கள் வீடுகளிலும் தேடிப்பார்த்தார்.

அங்கும் அவர் கிடைக்காமல் போகவே காஞ்சிக் கோவில் போலீசில் அருணாச்சலம் புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காஞ்சிக்கோவில் போலீசார் காணாமல் போன நர்சை தேடி வருகின்றனர். #tamilnews

Similar News