திருப்போரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
திருப்போரூர்:
மாமல்லபுரத்தை அடுத்த காரணை கிராமம் குண்ணப்பட்டு சாலையைச் சேர்ந்தவர் கெங்காதரன். இவருடைய மகன் கணபதி (வயது 25) பிளம்பராக வேலை பார்த்து வந்தார். அவர் சோழிங்க நல்லூரை அடுத்த செம்மஞ்சேரியில் வேலை செய்துவிட்டு நண்பர் மூர்த்தியுடன் மோட்டார் சைக்கிளில் பழையமாமல்ல புரம் சாலை வழியே வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார்.
திருப்போரூரை அடுத்த காலவாக்கம் பகுதியில் வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிளின் மீது மோதி சென்று விட்டது. நிலை தடுமாறிய 2 பேரும் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விழுந்தனர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கணபதியை அக்கம் பக்கத்தினம் மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கணபதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் மூர்த்தி லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கணபதியின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews