செய்திகள்

அ.தி.மு.க.வை இயக்குவது பிரதமர் மோடிதான்- திவாகரன்

Published On 2018-02-27 09:50 IST   |   Update On 2018-02-27 09:50:00 IST
அ.தி.மு.க.வை இயக்குவது மோடி தான் என்பது அனைவரும் அறிந்தது தான் என்று வேதாரண்யத்தில் சசிகலா சகோதரர் திவாகரன் கூறினார். #ADMK
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சசிகலா சகோதரர் திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வராது. இன்னும் 6 மாதத்துக்குள் சட்டமன்ற தேர்தல் வந்து விடும். எம்.எல்.ஏ. பிரபுவை தொடர்ந்து இன்னும் எம்.எல்.ஏ.க்கள் வரலாம். எல்லோரும் நம்ம எம்.எல்.ஏ.க்கள் தான். அவர்கள் இங்கேயும் இருப்பார்கள். அங்கேயும் இருப்பார்கள்.

குழப்பத்தின் உச்சக் கட்டத்தில் இருக்கும் அமைச்சர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார்கள். கட்சி தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை வைத்தது காமெடியாக போய்விட்டது. இந்த சிலையின் முகம் மட்டும் மாற்றப்படும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அரசையும், அ.தி.மு.க. வையும் யார் பொறுப்பாக கவனிக்கிறார்கள் என தெரியவில்லை. அவர்கள் செயல் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.


இலவச திட்டங்களை எதிர்க்கும் பிரதமர் மோடியை கொண்டு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளனர். ஜெயலலிதாவின் சிலையை சட்டமன்றத்தில் வைப்பதில் சட்ட சிக்கல் வரலாம். ஆனால் தலைமை கழகத்தில் சிலை வைப்பதில் பிரச்சனை இல்லை. எனவே சிலையை திறக்க பிரதமர் மோடியை அழைத்து இருக்கலாம். அ.தி.மு.க.வை இயக்குவது மோடி தான் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

Similar News