செய்திகள்

விராலிமலை அருகே வாகனம் மோதி கணவன்-மனைவி பலி

Published On 2018-02-26 22:03 IST   |   Update On 2018-02-26 22:03:00 IST
விராலிமலை அருகே மொபட் மீது வாகனம் மோதிய விபத்தில் கணவன் மற்றும் மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள நாவக்கோன்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூக்கன் (வயது 35). இவரது மனைவி ரதிக்கண்ணு(30). இவர்கள் இருவரும் நேற்று மொபட்டில் காளப்பனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. 

இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த மூக்கன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ரதிக்கண்ணுவை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே ரதிக்கண்ணு இறந்தார். 

இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி, மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

Similar News