செய்திகள்
பாலேஸ்வரம் கருணை இல்லம் பற்றி அரசுக்கு அறிக்கை தாக்கல் - காஞ்சீபுரம் கலெக்டர் தகவல்
பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமாக இறப்பது குறித்து போலீசார் உள்பட 6 துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்:
உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் ஆதரவற்றோர்களுக்கான கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்துக்கு சொந்தமான வேனில் காய்கறி மூட்டையுடன் இரும்புலியூர் இல்லத்தில் இறந்த விஜயகுமார் என்பவரது உடல் எடுத்து வரப்பட்டது.
அதே வேனில் பிணத்துடன் இரும்புலியூர் இல்லத்தில் தங்கி இருந்த செல்வராஜ், அன்னம்மாள் ஆகியோரும் அழைத்து வரப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமாக இறப்பதாகவும், அவர்களது உடல் பதப்படுத்தப்பட்டு எலும்புகள் விற்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து வருவாய்த் துறை, போலீசார் உள்பட 6 துறை அதிகாரிகள் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் அதிரடி விசாரணை நடத்தினர். அப்போது கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 60 பேர் இறந்து இருப்பதும், ஒவ்வொரு மாதமும் 40 முதல் 50 முதியோர் வரை மர்மமாக இறப்பதும் தெரிந்தது.
மேலும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பெரிய சுவரில் அடுக்கடுக்கான பெட்டிகள் போன்ற இடமும் இருந்தது.
இந்த அடக்க முறையானது கேரள மாநிலத்திலும், இத்தாலி நகரிலும் உள்ளதாக கருணை இல்ல நிர்வாகி தாமஸ் கூறி உள்ளார்.
இந்த முறையில் இறந்தவர்களை அடக்கம் செய்ய அரசிடம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
மேலும் இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட முதியோர்கள் சுமார் 350-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்களை இங்கு அழைத்து வர இடைத்தரகர்கள் எவரேனும் இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
கருணை இல்லத்தில் கடந்த 7 ஆண்டுகளாக இறந்த நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு அவர்கள் யார்- யார்? என்பது பற்றிய தகவல் இதுவரை அதிகாரிகளுக்கு தகவல் முழுமையாக கிடைக்கவில்லை.
இதற்கிடையே கருணை இல்லத்தில் நடத்தப்பட்ட விசாரணை குறித்து 6 துறை அதிகாரிகளும் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதுபற்றி கலெக்டர் பொன்னையாவிடம் கேட்ட போது கூறியதாவது:-
கருணை இல்லம் தொடர்பாக முழுமையான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அரசு உத்தரவுப்படி கருணை இல்லம் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து பொது மக்கள் கூறும்போது, கருணை இல்லத்தில் நடத்தப்பட்ட பல்வேறு துறை அதிகாரிகளின் ஆய்வு விபரங்கள் முழுமையாக வெளியிட மறுக்கின்றனர்.
எனவே இந்த இல்லத்தில் தற்போது சுய நினைவுடன் உள்ளவர்களை வெளிப்படையாக அழைத்து வந்து விசாரணை செய்தால் தான் கருணை இல்லத்தில் முறைகேடுகள் நடைபெறுகிறதா இல்லையா? என்பது தெரியவரும்.
இந்த கருணை இல்லத்திற்கு தாம்பரம், வேலூர், கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட 6 கிளைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு எல்லாம் அரசினால் முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா? எனவும் தெரியவில்லை’ என்றனர்.
உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் ஆதரவற்றோர்களுக்கான கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்துக்கு சொந்தமான வேனில் காய்கறி மூட்டையுடன் இரும்புலியூர் இல்லத்தில் இறந்த விஜயகுமார் என்பவரது உடல் எடுத்து வரப்பட்டது.
அதே வேனில் பிணத்துடன் இரும்புலியூர் இல்லத்தில் தங்கி இருந்த செல்வராஜ், அன்னம்மாள் ஆகியோரும் அழைத்து வரப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமாக இறப்பதாகவும், அவர்களது உடல் பதப்படுத்தப்பட்டு எலும்புகள் விற்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து வருவாய்த் துறை, போலீசார் உள்பட 6 துறை அதிகாரிகள் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் அதிரடி விசாரணை நடத்தினர். அப்போது கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 60 பேர் இறந்து இருப்பதும், ஒவ்வொரு மாதமும் 40 முதல் 50 முதியோர் வரை மர்மமாக இறப்பதும் தெரிந்தது.
மேலும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பெரிய சுவரில் அடுக்கடுக்கான பெட்டிகள் போன்ற இடமும் இருந்தது.
இந்த அடக்க முறையானது கேரள மாநிலத்திலும், இத்தாலி நகரிலும் உள்ளதாக கருணை இல்ல நிர்வாகி தாமஸ் கூறி உள்ளார்.
இந்த முறையில் இறந்தவர்களை அடக்கம் செய்ய அரசிடம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
மேலும் இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட முதியோர்கள் சுமார் 350-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்களை இங்கு அழைத்து வர இடைத்தரகர்கள் எவரேனும் இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
கருணை இல்லத்தில் கடந்த 7 ஆண்டுகளாக இறந்த நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு அவர்கள் யார்- யார்? என்பது பற்றிய தகவல் இதுவரை அதிகாரிகளுக்கு தகவல் முழுமையாக கிடைக்கவில்லை.
இதற்கிடையே கருணை இல்லத்தில் நடத்தப்பட்ட விசாரணை குறித்து 6 துறை அதிகாரிகளும் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதுபற்றி கலெக்டர் பொன்னையாவிடம் கேட்ட போது கூறியதாவது:-
கருணை இல்லம் தொடர்பாக முழுமையான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அரசு உத்தரவுப்படி கருணை இல்லம் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து பொது மக்கள் கூறும்போது, கருணை இல்லத்தில் நடத்தப்பட்ட பல்வேறு துறை அதிகாரிகளின் ஆய்வு விபரங்கள் முழுமையாக வெளியிட மறுக்கின்றனர்.
எனவே இந்த இல்லத்தில் தற்போது சுய நினைவுடன் உள்ளவர்களை வெளிப்படையாக அழைத்து வந்து விசாரணை செய்தால் தான் கருணை இல்லத்தில் முறைகேடுகள் நடைபெறுகிறதா இல்லையா? என்பது தெரியவரும்.
இந்த கருணை இல்லத்திற்கு தாம்பரம், வேலூர், கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட 6 கிளைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு எல்லாம் அரசினால் முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா? எனவும் தெரியவில்லை’ என்றனர்.