செய்திகள்

மயிலாடுதுறையில் மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

Published On 2018-02-20 14:02 GMT   |   Update On 2018-02-20 14:02 GMT
மயிலாடுதுறையில் மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக புகார் எழுந்ததை யொட்டி நேற்று 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை பகுதியில் மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக புகார் எழுந்ததை யொட்டி போலீசார் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். மயிலாடுதுறை சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் நேற்று இரவு மயிலாடுதுறை சின்னகடை வீதி மெயின் ரோட்டில் வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில் மயிலாடுதுறையை சேர்ந்த சுரேஷ்குமார் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல் அதே வழியில் வந்த ஒரு டிப்பர் லாரியை போலீசார் சோதனை செய்தனர். விழுப்புரம் கொங்கராம் பாளையம் காமராஜ் நகரை சேர்ந்த கன்னியப்பன். என்பவர் மணல் கடத்தியது தெரியவந்தது. அந்த லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். #tamilnews
Tags:    

Similar News