செய்திகள்

தாம்பரம் அருகே பெண் கழுத்தை அறுத்து கொலை

Published On 2018-02-18 15:22 IST   |   Update On 2018-02-18 15:22:00 IST
தாம்பரம் அருகே பெண் கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்:

சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த செட்டிபுண்ணியம் இந்திரா நகரை சேர்ந்தவர் துளசி (வயது 35). கணவரை பிரிந்து வாழ்ந்த அவர் தாம்பரம், பல்லாவரம் பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்தார்.

அப்போது தாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரம் பெரியார் நகரில் உள்ள நாகூர் என்ற விதவைப் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரும் வீட்டு வேலை செய்து வருகிறார்.

இதையடுத்து கடந்த சில மாதங்களாக நாகூர் வீட்டில் துளசி தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை நாகூர் வீட்டில் துளசி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தகவல் அறிந்ததும் மணிமங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். துளசியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

துளசியின் உடல் அலங்கோலமான நிலையில் இருந்தது. எனவே அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவருடன் தங்கி இருந்த நாகூர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கொலையுண்ட துளசியுடன் வாலிபர் ஒருவர் நெருங்கி பழகி வந்தார். அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து துளசியை சந்தித்து சென்றுள்ளார்.

எனவே தனிமையில் இருந்த போது ஏற்பட்ட தகராறில் துளசியை அவருடைய கள்ளக்காதலனே கழுத்தை அறுத்து கொன்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

தலைமறைவான நாகூர் சிக்கினால் தான் கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது முழுமையாக தெரியவரும். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News