செய்திகள்
பவானி அருகே பெண்ணை எரித்து கொலை: கள்ளக்காதலன் கைது
பவானி அருகே பெண்ணை அடித்து கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் கைதான கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பவானி:
பவானி அருகே உள்ள சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவி தனலட்சுமி (வயது 45).
இவர் தனது தாய் மற்றும் தந்தை இருளப்பன் (70) ஆகியோருடன் வசித்து வந்தார். தனலட்சுமி கடந்த மாதம் 30-ந் தேதி வீட்டின் அருகே உள்ள குப்பைமேட்டில் கரிக்கட்டையான நிலையில் பிணமாக கிடந்தார்.
அவர் எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக தளவாய்பேட்டையை சேர்ந்த தமிழ்செல்வன் (40) போலீசில் சிக்கினார். அவர் தனலட்சுமியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் அவர் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனக்கும், எனது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவள் என்னிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து வாங்கி குழந்தைகளுடன் தனியாக சென்றுவிட்டாள்.
நான் பழைய இரும்புகளை வாங்கி அதை வீடு வீடாக சென்று விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தேன். அப்போது தனலட்சுமியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம்.
அப்போது தனலட்சுமி பணம் கேட்பாள். நானும் பணம் கொடுத்து வந்தேன். ஒரு கட்டத்தில் என்னிடம் பணம் அதிகமாக கேட்டாள். அதற்கு நான் மறுத்து வந்தேன். இதனால் அவள் என்னை தொந்தரவு செய்து வந்தாள்.
மேலும் அவள் என்னிடம் உல்லாசமாக இருக்கவும் மறுத்து வந்தாள். அதுமட்டுமின்றி வேறு நபருடன் கள்ளத்தொடர்பு அவள் வைத்திருந்ததும் எனக்கு தெரியவந்தது. இது எனக்குள் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவளை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்.
சம்பவத்தன்று அவளுடைய வீட்டுக்கு நான் வழக்கம்போல் சென்றேன். அவளை நான் உல்லாசத்துக்கு வரும்படி அழைத்தேன். ஆனால் அவள் வரவில்லை. இதனால் எனக்கும் அவளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தனலட்சுமி கோபித்தபடி வீட்டை விட்டு வெளியே சென்றாள்.
உடனே நான் வெளியே ஓடிச்சென்று நான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனலட்சுமியை பிடித்து அவளின் மார்பு, வயிறு பகுதியில் என மாறி மாறி குத்தினேன். சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தாள். வீட்டு வாசலில் ரத்தக்கறை படிந்திருந்தது. அதை மறைக்க மண்ணை போட்டு மூடினேன்.
பிணத்தை வீடு அருகே உள்ள குப்பைமேட்டுக்கு இழுத்து சென்றேன். அங்கு கிடந்த மரப்பலகை, வைக்கோல், தென்னங்கீற்றுகளை அடுக்கி வைத்து அவற்றின் மீது பிணத்தை போட்டு எரித்தேன்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறினார். #Tamilnews
பவானி அருகே உள்ள சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவி தனலட்சுமி (வயது 45).
இவர் தனது தாய் மற்றும் தந்தை இருளப்பன் (70) ஆகியோருடன் வசித்து வந்தார். தனலட்சுமி கடந்த மாதம் 30-ந் தேதி வீட்டின் அருகே உள்ள குப்பைமேட்டில் கரிக்கட்டையான நிலையில் பிணமாக கிடந்தார்.
அவர் எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக தளவாய்பேட்டையை சேர்ந்த தமிழ்செல்வன் (40) போலீசில் சிக்கினார். அவர் தனலட்சுமியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் அவர் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனக்கும், எனது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவள் என்னிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து வாங்கி குழந்தைகளுடன் தனியாக சென்றுவிட்டாள்.
நான் பழைய இரும்புகளை வாங்கி அதை வீடு வீடாக சென்று விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தேன். அப்போது தனலட்சுமியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம்.
அப்போது தனலட்சுமி பணம் கேட்பாள். நானும் பணம் கொடுத்து வந்தேன். ஒரு கட்டத்தில் என்னிடம் பணம் அதிகமாக கேட்டாள். அதற்கு நான் மறுத்து வந்தேன். இதனால் அவள் என்னை தொந்தரவு செய்து வந்தாள்.
மேலும் அவள் என்னிடம் உல்லாசமாக இருக்கவும் மறுத்து வந்தாள். அதுமட்டுமின்றி வேறு நபருடன் கள்ளத்தொடர்பு அவள் வைத்திருந்ததும் எனக்கு தெரியவந்தது. இது எனக்குள் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவளை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்.
சம்பவத்தன்று அவளுடைய வீட்டுக்கு நான் வழக்கம்போல் சென்றேன். அவளை நான் உல்லாசத்துக்கு வரும்படி அழைத்தேன். ஆனால் அவள் வரவில்லை. இதனால் எனக்கும் அவளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தனலட்சுமி கோபித்தபடி வீட்டை விட்டு வெளியே சென்றாள்.
உடனே நான் வெளியே ஓடிச்சென்று நான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனலட்சுமியை பிடித்து அவளின் மார்பு, வயிறு பகுதியில் என மாறி மாறி குத்தினேன். சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தாள். வீட்டு வாசலில் ரத்தக்கறை படிந்திருந்தது. அதை மறைக்க மண்ணை போட்டு மூடினேன்.
பிணத்தை வீடு அருகே உள்ள குப்பைமேட்டுக்கு இழுத்து சென்றேன். அங்கு கிடந்த மரப்பலகை, வைக்கோல், தென்னங்கீற்றுகளை அடுக்கி வைத்து அவற்றின் மீது பிணத்தை போட்டு எரித்தேன்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறினார். #Tamilnews