செய்திகள்

குணசீலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2018-01-29 10:32 GMT   |   Update On 2018-01-29 10:32 GMT
குணசீலம் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

முசிறி:

முசிறி மின்சார வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திர விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குணசீலம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதியான ஏவூர், அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம், வாத்தலை, மாங்கரைப்பேட்டை, நெய்வேலி, கொடுந்துறை, மணப்பாளையம், நாச்சம் பட்டி, வீரமணிப் பட்டி, திண்ணக்கோணம், சித்தாம்பூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News