செய்திகள்
குடிபோதையில் பெண் போலீசிடம் தகராறு: 2 வாலிபர்கள் கைது
ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசிடம் தகராறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் எழுத்தர் பணி செய்பவர் கார்த்திகா (38) இவர் நேற்று முன்தினம் மாலை போலீஸ் நிலையத்தில் பணிசெய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மாரியப்பன் (22) அதே ஊரை சேர்ந்த பழனிசாமி மகன் ராஜசேகர்(22) விவசாய கூலி தொழிலாளி ஆகிய இருவரும் குடிபோதையில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசார் கார்த்திகா என்பவரிடம் தகராறு செய்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து கார்த்திகா கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குபதிந்து மாரியப்பன், ராஜசேகர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றார். #tamilnews