செய்திகள்

வேதாரண்யத்தில் லாரி டிரைவர்-வியாபாரியை தாக்கிய 3 பேர் கைது

Published On 2018-01-18 16:24 GMT   |   Update On 2018-01-18 16:24 GMT
திறுத்துறைப்பூண்டி சாலையில் லாரியை திருப்ப முயன்ற போது டிரைவர் மற்றும் வியாபாரியை தரைக்குறைவாக பேசி தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் லாரி செட்டில் டிரைவராக வேலை பார்ப்பவர் புஷ்பவனத்தை சேர்ந்த அற்புதநவீன்(23). இவர் சம்பவத்தன்று லாரியை திறுத்துறைப் பூண்டி சாலையில் திருப்ப முயன்ற போது வேதாரண்யம் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து தரக்குறைவாக பேசி தகராறு செய்தனர்.

இதைப் பார்த்த அருகிலிருந்த கடைக்காரர் மாரியப்பன் கேட்டபோது அவரையும் தரக்குறைவாக பேசி செல்போனில் மேலும் சிலரை அழைத்து அவர் கடையை தாக்கியுள்ளனர். இதில் டிரைவர் அற்புதநவீன் மற்றும் கடைக்காரர் மாரியப்பன் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக டிரைவர் அற்புதநவீன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இண்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் சம்பந்தப்ட்ட ராமகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த பாலு மகன் வினோத்(23) ஆயக்காரன்புலம்-மூன்றாம் சேத்தியைச் சேர்ந்த வாசு என்ற வீரசேகரன்(24) முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பொதுவுடைமூர்த்தி மகன் பார்த்திபன்(26) ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். #tamilnews

Tags:    

Similar News