செய்திகள்

காஞ்சீபுரம் ரவுடி கொலையில் 3 பேர் கைது

Published On 2018-01-18 16:04 IST   |   Update On 2018-01-20 10:47:00 IST
காஞ்சீபுரம் ரவுடி கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ரவுடி நிவாஸ்கானை அவர்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் திருக்காலி மேடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த நிவாஸ் கான் (25) ரவுடி. இவர் கடந்த 15-ந் தேதி மாலை மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை பிடிக்க 4 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கொலை தொடர்பாக திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த தனுஷ், வெள்ளைமோகன், செல்லா ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ரவுடி நிவாஸ்கானை அவர்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், ரவுடி வெள்ளைமோகனுக்கும் நிவாஸ்கானுக்கும் முன் விரோதம் இருந்தது. இதேபோல் தனுஷ் மற்றும் செல்லாவுக்கும் நிவாஸ்கான் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் 3 பேரும் சேர்ந்து நிவாஸ்கானை தீர்த்து கட்ட திட்டம் போட்டனர். சில நாட்களாக கண்காணித்து வந்த அவர்கள் கடந்த 15-ந் தேதி தனியாக வந்த நிவாஸ்கானை அரிவாளால் வெட்டி கொலை செய்து உள்ளனர். 

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். #tamilnews

Similar News