காஞ்சீபுரம் அருகே என்ஜினீயரிங் படிக்க முடியாத ஏக்கத்தில் மாணவி தற்கொலை
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் ஐஸ்வர்யா (19). ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.
இவரின் அண்ணன் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இதனால் ஐஸ்வர்யாவும் என்ஜினீயரிங் படிக்க ஆசைப்பட்டார். ஆனால் அவரை பெற்றோர் பி.காம். சேர்த்தனர்.
இதனால் மனவேதனையில் இருந்த ஐஸ்வர்யா சரிவர படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் மனஉளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ் பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காஞ்சீபுரத்தில் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் குளத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக கிடந்தார்.
இது குறித்து கோவில் செயல் அலுவலர் கோவிந்த ராஜ் பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனி விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
பிணமாக கிடந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews