செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கடந்த 3 நாட்களில் 89 ஆயிரம் பேர் வருகை

Published On 2018-01-17 03:49 GMT   |   Update On 2018-01-17 03:49 GMT
பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 89 ஆயிரம் பேர் பார்வையிட வந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலந்தூர்:

பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது.

பொங்கல் பண்டிகையன்று (14-ந் தேதி) 14 ஆயிரத்து 88 பேரும், மாட்டு பொங்கலன்று (15-ந் தேதி) 31 ஆயிரத்து 339 பேரும், காணும் பொங்கலன்று (நேற்று) 5 ஆயிரத்து 705 சிறுவர்கள் உள்பட 43 ஆயிரத்து 735 பேரும் என மொத்தம் 89 ஆயிரத்து 162 பேர் வண்டலூர் உயிரியல் பூங்காவை பார்வையிட வந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews

Tags:    

Similar News