செய்திகள்

காஞ்சீபுரம் ரெயில் நிலையத்தில் கோவில் ஓவியங்களை அழித்த 4 பேர் கைது

Published On 2017-12-27 14:50 IST   |   Update On 2017-12-27 14:50:00 IST
காஞ்சீபுரம் ரெயில் நிலையத்தில் கோவில் ஓவியங்களை அழித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையத்தில் பயணிகளை ஈர்க்கும் வகையிலும், காஞ்சீபுரம் நகரின் பெருமையை விளக்கும் வகையிலும் காமாட்சியம்மன், ஏகாம்பரேஸ்வர், வரதராஜபெருமாள், ஆதிசங்கரர் காஞ்சி மகா பெரியவர் உருவங்கள் கலைநயத்துடன் வரையப்பட்டு இருந்தது.

கடந்த 21-ந்தேதி இரவு மர்ம நபர்கள் இந்த ஓவியங்களை அழித்து சென்றுவிட்டனர். இச்சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பெரும்பரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து ரெயில் நிலைய மேலாளர் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஓவியங்களை அழித்ததாக பல்வேறு அமைப்புகள் மீதும் புகார் செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கோவில் ஓவியங்களை அழித்ததாக மக்கள் மன்றத்தை சேர்ந்த மகேஷ், ஜெசி, அம்பேக்தர் பாலு, தஞ்சை தமிழன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே ரெயில் நிலைய மேலாளர் சீனிவாசன் பணி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரெயில் நிலையத்தில் அழிக்கப்பட்ட ஓவியங்கள் மீண்டும் கலைநயத்துடன் வரையப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News