செய்திகள்

சுங்குவார்சத்திரம் அருகே மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி

Published On 2017-12-27 12:44 IST   |   Update On 2017-12-27 12:44:00 IST
சுங்குவார்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, திருத்தணி எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார்.

இருவரும் சுங்குவார்சத்திரம் பகுதியில் தங்கி மாம்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

நேற்று மோட்டார்சைக்கிளில் சுங்குவார்சத்திரத்தில் இருந்து வேலைக்கு சென்ற போது சென்னையில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் சுங்குவார்சத்திரம் கூட்டு சாலையில் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் பாலாஜி, நவீன் குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

தகவல் கிடைத்ததும் சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடல்களை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான பஸ் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News