செய்திகள்

நெய்வேலியில் என்.எல்.சி. தொழிலாளி மாயம்

Published On 2017-12-21 22:03 IST   |   Update On 2017-12-21 22:03:00 IST
நெய்வேலியில் என்.எல்.சி. தொழிலாளி மாயமானது குறித்து அவரது மகன் போலீசில் புகார் செய்தார். போலீசார் தொழிலாளியை தேடி வருகிறார்கள்.

நெய்வேலி:

நெய்வேலி புதுநகர் 27-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (வயது52). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் முதலாவது சுரங்கத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று முருகன் அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

முருகனின் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

இது குறித்து முருகனின் மகன் திருமால் நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான என்.எல்.சி. தொழிலாளியை தேடி வருகின்றனர்.

Similar News