செய்திகள்
அரியலூர் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் இலவச இருதயநல மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
அரியலூர்:
அரியலூர் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் சென்னை குளோபல் மருத்து வமனை நிர்வாகமும், அரியலூர் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய இலவச இருதயநல மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
இதில் சென்னை குளோபல் மருத்து வமனை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ரவிக்குமார், பாலாஜி, மக்கள் தொடர்பு அலுவலர் சுந்தர சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு இருதயநல சிகிச்சைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.
முகாமில் ரோட்டரி சங்க தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் அமர்நாத், பொருளாளர் ராமதாஸ், திட்ட தலைவர் தண்டபாணி, திட்ட செயலா ளர் சீனிவாசன் உட்பட அனைத்து பொருப்பாளர் களும் கலந்து கொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.