செய்திகள்

வேலைபார்த்த இடத்திலேயே ரூ.2ž லட்சம் மதிப்புள்ள சேலைகளை திருடிய ஊழியர் கைது

Published On 2017-12-12 17:36 IST   |   Update On 2017-12-12 17:37:00 IST
பவானிசாகர் அருகே வேலைபார்த்த இடத்திலேயே ரூ.2 லட்சம் மதிப்புள்ள சேலையை திருடி சென்ற ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பவானிசாகர்:

பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுமணி (42). கைத்தறி சேலை தயாரிப்பாளரான இவர் வீட்டிலேயே வியாபாரம் செய்து வந்தார்.

இவரிடம் எரங்காட்டுர் கிராமத்தை சேர்ந்தரவிக் குமார் (22) என்பவர் குமாஸ்தாவாக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் கடையில் வைக்கப்பட்டிருந்ந சேலைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது.

இதையடுத்து கடையில் பணிபுரிபவர்களை வேலுமணி கவனித்தபோது ரவிக்குமார் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து வேலுமணி ரவிக்குமார் மீது பவானிசாகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரவிக்குமாரை விசாரித்த போது ரு.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 80 சேலைகளை திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் ரவிக்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பிறகு சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News