செய்திகள்

நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

Published On 2017-11-29 17:28 GMT   |   Update On 2017-11-29 17:28 GMT
விருதுநகர் அருகே நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்:

விருதுநகர் அருகே மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் தங்கப்பாண்டியன்(வயது35). இவர் மீது குற்றப்பிரிவு போலீசார் 2007– ம் வருடம் நிலமோசடி வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில் தலைமறைவாகி விட்டார்.

10 வருடங்களுக்குப்பிறகு நேற்று அவர் விருதுநகர் கலெக்டர் அலுவலக பகுதிக்கு வந்துள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News