செய்திகள்

மிலாடி நபியை முன்னிட்டு சென்னையில் 2-ந்தேதி டாஸ்மாக் கடைகள் அடைப்பு

Published On 2017-11-29 03:38 GMT   |   Update On 2017-11-29 03:38 GMT
மிலாடி நபியை முன்னிட்டு சென்னையில் 2-ந்தேதி டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

டிசம்பர் மாதம் 2-ந்தேதி (சனிக்கிழமை) அன்று மிலாடி நபி தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், அதனை சார்ந்த பார்கள் மற்றும் உரிமம் பெற்ற ஓட்டல் பார்கள் என அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். மிலாடி நபி அன்று மது விற்பனை செய்யக்கூடாது. இந்த அறிவிப்பை மீறி மது விற்பனை செய்தால் மதுபான விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News