செய்திகள்

ரூ.3 லட்சம் கடனுக்கு ரூ.6ž லட்சம் கட்ட சொல்கிறார்கள்: கலெக்டரிடம் டிரைவர் புகார்

Published On 2017-11-21 18:12 IST   |   Update On 2017-11-21 18:12:00 IST
தனியார் நிதி நிறுவனத்தில் டிரைவர் ஒருவர் ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதற்கு ரூ.6ž லட்சம் கட்ட சொல்லுவதாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
ஈரோடு:

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெருந்துறை அடுத்த கருமாண்டிசெல்லி பாளையம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் மற்றும் அவரது மனைவி சாமிலி ஆகியோர் ஒரு மனு கொடுத்தனர்.

தனியார் நிதி நிறுவனத்தில் கடன் மூலம் லோடுவேன் ஒன்று வாங்கினேன். மாதந்தோறும் கடன் கட்டி வருகிறேன். இந்த வண்டியின் ஒரிஜினல் பதிவு புத்தகம், இன்ஸ்சுரன்ஸ் உள்பட அனைத்து ரசீதுகளும் அவர்களிடம்தான் உள்ளது.

வண்டியை புதுப்பிப்பதற்கு வண்டியின் ஆவணங்களை அந்த நிறுவனத்தில் கேட்டேன். ஆனால் அவர்கள் ஆவணங்களை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

ரூ.3 லட்சம் கடனுக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் கட்டி உள்ளேன். ஆனால் அவர்கள் இன்னும் ரூ.4 லட்சம் தர வேண்டும் என கூறுகிறார்கள். எனவே இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News