செய்திகள்

ஈரோட்டில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2017-11-19 19:23 IST   |   Update On 2017-11-19 19:23:00 IST
தாய் திட்டியதால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு:

ஈரோடு, வில்லரசம்பட்டி பொன்னிநகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது23). ஒர்க்ஷாப்பில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி சிந்துஜா (19). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர்களுக்கு திருமணம் முடிந்து 2½ மாதங்கள் ஆகிறது.

புதுமண தம்பதியினர் உறவினர்கள் வீடுகளுக்கு விருந்து சென்று வந்துள்ளனர். இந்நிலையில் ஈரோடு, ராசாபாளையம் தென்றல்நகரில் வசிக்கும் சிந்துஜாவின் தாய் லட்சுமி (50) என்பவர் வீட்டுக்கு கிருஷ்ணனும், சிந்துஜாவும் விருந்துக்கு சென்றுள்ளனர்.

அங்கு சிந்துஜாவுக்கும், லட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சிந்துஜாவை லட்சுமி திட்டியதாக தெரிகிறது. பின்னர் விருந்து முடிந்து புதுமண தம்பதி பொன்னிநகர் சென்றனர்.

இந்நிலையில் சிந்துஜா தாய் திட்டியதை நினைத்து கொண்டே இருந்துள்ளார். நேற்று காலை வீட்டில் ஆள்ளில்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்து, உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் முடிந்து 2½ மாதங்கள் ஆவதால் ஆர்.டி.ஓ. நர்மதாதேவியும் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News