செய்திகள்

காதலிப்பதாக கூறி உல்லாசம்: பெண்ணை கர்ப்பிணியாக்கி ஏமாற்றிய வாலிபர்

Published On 2017-11-15 10:54 GMT   |   Update On 2017-11-15 10:54 GMT
கோபி அருகே உல்லாசம் அனுபவித்த பெண்ணை கர்ப்பிணியாக்கி திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:

கோபி அருகே உள்ள திங்களூரை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகள் கவுசல்யா (வயது 20). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஆல்வின் (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

காதலிப்பதாக கூறி கவுசல்யாவிடம் ஆல்வின் நெருங்கி பழகினார். ஆசை வார்த்தை கூறி கவுசல்யாவிடம் ஆல்வின் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதில் கவுசல்யா கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி ஆல்வினிடம் கவுசல்யா கூறினார். இதை அறிந்த ஆல்வின் பெற்றோரிடம் இது பற்றி கூற வேண்டாம் என்று கூறிவிட்டார்.

இதனால் தான் கர்ப்பமடைந்ததை கவுசல்யா வெளியில் கூறாமல் இருந்தார். இந்த நிலையில் அவர் நிறை மாத கர்ப்பிணி ஆனார்.

கடந்த 29-8-2017 அன்று அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. உடல் நிலை சரியில்லாமல் இருந்த அந்த குழந்தை மறு நாள் இறந்துபோனதாக கூறப்படுகிறது.

குழந்தை பிறந்து இறந்த பின்னரும் கவுசல்யாவை திருமணம் செய்யாமல் ஆல்வின் இழுத்தடித்தாராம். திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும் மறுத்து விட்டார்.

இது தொடர்பாக கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கவுசல்யா புகார் செய்தார். புகாரில், ‘‘ஆல்வின் தன்னை ஏமாற்றி தாயாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறார். அவரது குடும்பத்தினர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்’’ என்று கூறி இருந் தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயத்ரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News