செய்திகள்

மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த டிரைவர்: 4 பேர் மீது வழக்கு

Published On 2017-11-15 09:08 GMT   |   Update On 2017-11-15 09:09 GMT
கவுந்தபாடி அருகே மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த டிரைவர், அதற்கு உடந்தையாக இருந்த தாயார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோபி:

கவுந்தபாடி அருகே உள்ள பொம்மன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 30). டிரைவர். இவருக்கும் பரிமளா (23) என்பவருக்கும் கடந்த 13-3-2009 அன்று திருமணம் நடந்தது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் முருகேசன் கேரளாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. பரிமளாவுக்கு தெரியாமல் அந்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார்.

இதை அறிந்த பரிமளா அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக 26-7-2017 அன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பரிமளா புகார் செய்தார்.

அதில், ‘‘எனது கணவர் எனக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்துகொண்டார். இதற்கு அவரது தாய் மற்றும் உறவினர்கள் உடந்தையாக இருந்தனர்’’ என்று கூறி இருந்தார்.

போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தற்போது கோபி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயத்ரி வழக்குப்பதிவு செய்தார்.

மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த முருகேசன், அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News