பவானி அருகே பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கல்பாவி முத்து ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி பெயர் பூங்கொடி. இவர்களது மகள் வைஷ்ணவி (வயது 15). இவர் பவானி அருகே உள்ள மைலம்பாடி அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இன்று காலை 7.30 மணியளவில் வீட்டில் இருந்த மாணவி வைஷ்ணவி திடீரென தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார்.
அவர் உடலில் தீ பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. வலி பொறுக்காமல் அலறினார்.
மகளின் சத்தம் கேட்டு அவரது தாயார் கதவை திறந்து கொண்டு ஓடிச் சென்று பார்த்தார். அங்கு தன் மகள் தீயில் எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூக்குரலிட்டார்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவியின் உடலில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் சம்பவ இடத்திலேயே மாணவி வைஷ்ணவி உடல் கருகி பரிதாபமாக இறந்து விட்டார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவி வைஷ்ணவி எதற்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.