செய்திகள்
தலமலை - பவானிசாகர் வனப்பகுதியில் சுற்றுலா செல்ல பயணிகள் ஆர்வம்
அடர்ந்த காடான தலமலை மற்றும் பவானிசாகர் வனப்பகுதியில் சுற்றுலா செல்ல பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வண்ணபூரணி வனசுற்றுலா திட்டம் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், தலமலை, ஆசனூர், தாளவாடி, கேர்மாளம் ஆகிய 7 வனச்சரகங்களிலும் அடர்ந்த வனப்பகுதியில் வேன் மற்றும் ஜீப்களில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் வார விடுமுறை நாட்களான சனிக் கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை மற்றும் மாலை என இரண்டு நேரம் வனப்பகுதிக்குள் பொது மக்கள் சென்று வரலாம். சுற்றுலா செல்ல விருப்பமுள்ளவர்கள் தற்காலிகமாக சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் வனக்கோட்ட அலுவலகங்களில் முன்பதிவு செய்து வனப் பகுதிக்குள் சென்று வரலாம்.
இந்த நிலையில் கடந்த வாரம் தொடங்கப்பட்ட வண்ணபூரணி சுற்றுலா திட்டத்தில் முன்பதிவு செய்த பயணிகள் அழைத்துச் செல் லப்பட்டனர்.
தலமலை வனப்பகுதியில் சுற்றுலா சென்ற பயணிகள் யானை, மான், கழுகு, காட்டெருமை போன்ற வனவிலங்குகளை கண்டு திகிலுடன் ரசித்து உற்சாகம் அடைந்தனர்.
பிறகு சுற்றுலா பயணிகள் பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள தெங்கு மரஹாடா வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு அவர்கள் அரிய வகை மான் இனமான பிளாக்பக் என்றழைக்கப்படும் வெளிநாட்டு மான்களை பார்த்ததாக தெரிவித்தனர்.
இதேபோல் தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட வனச்சரகங்களிலும் சென்று வனப்பகுதியை கண்டு ரசிக்க பொதுமக்கள் முன்பதிவு செய்தனர். அவர்களை அந்த பகுதிகளுக்கு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தலமலை மற்றும் பவானிசாகர் வனச்சரகங்களில் சுற்றுலா செல்ல பயணிகள் ஆர்வம் காட்டுவதால் முன்பதிவு தொடங்கியவுடன் உடனடியாக பதிவாகிவிடுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வண்ணபூரணி வனசுற்றுலா திட்டம் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், தலமலை, ஆசனூர், தாளவாடி, கேர்மாளம் ஆகிய 7 வனச்சரகங்களிலும் அடர்ந்த வனப்பகுதியில் வேன் மற்றும் ஜீப்களில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் வார விடுமுறை நாட்களான சனிக் கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை மற்றும் மாலை என இரண்டு நேரம் வனப்பகுதிக்குள் பொது மக்கள் சென்று வரலாம். சுற்றுலா செல்ல விருப்பமுள்ளவர்கள் தற்காலிகமாக சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் வனக்கோட்ட அலுவலகங்களில் முன்பதிவு செய்து வனப் பகுதிக்குள் சென்று வரலாம்.
இந்த நிலையில் கடந்த வாரம் தொடங்கப்பட்ட வண்ணபூரணி சுற்றுலா திட்டத்தில் முன்பதிவு செய்த பயணிகள் அழைத்துச் செல் லப்பட்டனர்.
தலமலை வனப்பகுதியில் சுற்றுலா சென்ற பயணிகள் யானை, மான், கழுகு, காட்டெருமை போன்ற வனவிலங்குகளை கண்டு திகிலுடன் ரசித்து உற்சாகம் அடைந்தனர்.
பிறகு சுற்றுலா பயணிகள் பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள தெங்கு மரஹாடா வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு அவர்கள் அரிய வகை மான் இனமான பிளாக்பக் என்றழைக்கப்படும் வெளிநாட்டு மான்களை பார்த்ததாக தெரிவித்தனர்.
இதேபோல் தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட வனச்சரகங்களிலும் சென்று வனப்பகுதியை கண்டு ரசிக்க பொதுமக்கள் முன்பதிவு செய்தனர். அவர்களை அந்த பகுதிகளுக்கு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தலமலை மற்றும் பவானிசாகர் வனச்சரகங்களில் சுற்றுலா செல்ல பயணிகள் ஆர்வம் காட்டுவதால் முன்பதிவு தொடங்கியவுடன் உடனடியாக பதிவாகிவிடுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.