செய்திகள்

ரெயிலில் கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசியை கடத்திய பெண் கைது

Published On 2017-11-13 11:42 GMT   |   Update On 2017-11-13 11:42 GMT
கேரளாவுக்கு ரெயில் மூலம் ரே‌ஷன் அரிசி கடத்த முயன்ற பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு:

பெங்ளூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு, தினமும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர்.

அவர்கள் பொது பெட்டியில் சோதனை செய்த போது ஒரு பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் தர்மபுரி மாவட்டத்தை மொரப்பூர், அண்ணாநகரை சேர்ந்த வேடியப்பன் மனைவி சத்தியவாணி (வயது 45) என்பதும், 12 பைகளில் 250 கிலோ ரே‌ஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்வதும் தெரிய வந்தது.

இதையடுத்து அரிசி பறிமுதல் செய்யப்பட்டு சத்தியவாணியை ரெயில் பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News