செய்திகள்
பலியான நாகராஜ்

பவானி அருகே டெங்கு காய்ச்சலுக்கு சமையல் காண்டிராக்டர் மரணம்

Published On 2017-11-09 16:37 IST   |   Update On 2017-11-09 16:37:00 IST
பவானி அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி சமையல் காண்டிராக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பவானி:

பவானி அருகே உள்ள ஜம்பை பாரதி நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 31). சமையல் காண்டிராக்டர்.

நாகராஜ் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாராம். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மேல்சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டெங்கு அறிகுறி இருந்தது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணிக்கு நாகராஜ் பரிதாபமாக இறந்து விட்டார். இவருக்கு சோனா (வயது 26) என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

Similar News