செய்திகள்

பண்ருட்டியில் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

Published On 2017-11-07 15:54 IST   |   Update On 2017-11-07 15:54:00 IST
பண்ருட்டியில் இன்று காலை சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பண்ருட்டி:

பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

இன்று காலை பண்ருட்டி கடலூர் ரோட்டில் உள்ள சாமியார் தர்கா பின்புறம் ஆர்.எஸ். மணிநகரில் வசித்து வரும் ஏழுமலை என்பவரது மனைவி வீரம்மாள் (63) வீட்டின் முன்பு துணி வைத்து கொண்டு இருந்தார். அப்போது வீட்டின் சுவர் இடிந்து இவர் மீது விழுந்தது.

இதில் படுகாயம் அடைந்த வீரம்மாள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வீரம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News