செய்திகள்

நம்பியூர் அருகே விபத்து: விவசாயி பலி

Published On 2017-11-06 17:21 IST   |   Update On 2017-11-06 17:21:00 IST
நம்பியூர் அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நம்பியூர், நவ. 6-

நம்பியூர் அருகே உள்ள கும்மகாளி பாளையம் கே.ஏ.எஸ். நகரை சேர்ந்தவர் குப்பன் (வயது 57). விவசாய கூலி தொழிலாளி.

இவர் சைக்கிளில் நம்பியூர் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். ஒரு வளைவில் வந்தபோது அந்த வழியாக வந்த ஜீப் அவர் பின்னால் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து இறந்த குப்பனின் மகன் மருதாசலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கடத்தூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கதிர்வேல் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

Similar News