செய்திகள்
பெருந்துறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர்கள் மீது தாக்குதல்
பெருந்துறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக முன்னாள் ஒன்றிய செயலாளர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த சிலேட்டர் நகரை சேர்ந்தவர் மணல் முரளி என்கிற முனியன் (வயது 41). இவர் பெருந்துறை ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளராக உள்ளார்.
இவரது மனைவி சகுந்தலா (36). இவர்கள் 2 பேரும் நேற்று மாலை வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு நல்லாம்பட்டியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜயபாலன் (42) மற்றும் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் வந்தனர்.
முனியனிடம் விஜயபாலன் சிலவற்றை கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை சகுந்தலா தடுத்தார். அப்போது சகுந்தலா தாக்கப்பட்டதாக தெரிகிறது. காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக முனியனும், ஈரோடு மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் அம்பேத்கரும் வந்தனர்.
அப்போது விஜயபாலன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் அங்கு வந்தனர். அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு முனியனையும், அம்பேத்கரையும் தாக்கினர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கில் விஜயபாலன் மற்றும் மெல்வின் (27), சிலம்பரசன், மாத்ரு (27), நந்தகுமார் (23), சங்கிலி (27), அண்ணாமலை (26) ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டனர். பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் பெருந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெருந்துறை அடுத்த சிலேட்டர் நகரை சேர்ந்தவர் மணல் முரளி என்கிற முனியன் (வயது 41). இவர் பெருந்துறை ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளராக உள்ளார்.
இவரது மனைவி சகுந்தலா (36). இவர்கள் 2 பேரும் நேற்று மாலை வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு நல்லாம்பட்டியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜயபாலன் (42) மற்றும் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் வந்தனர்.
முனியனிடம் விஜயபாலன் சிலவற்றை கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை சகுந்தலா தடுத்தார். அப்போது சகுந்தலா தாக்கப்பட்டதாக தெரிகிறது. காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக முனியனும், ஈரோடு மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் அம்பேத்கரும் வந்தனர்.
அப்போது விஜயபாலன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் அங்கு வந்தனர். அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு முனியனையும், அம்பேத்கரையும் தாக்கினர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கில் விஜயபாலன் மற்றும் மெல்வின் (27), சிலம்பரசன், மாத்ரு (27), நந்தகுமார் (23), சங்கிலி (27), அண்ணாமலை (26) ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டனர். பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் பெருந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.