செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 98 ஏரிகள் நிரம்பின

Published On 2017-11-02 15:14 IST   |   Update On 2017-11-02 15:14:00 IST
ஏரிகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக 2 பெரிய ஏரிகள் உள்பட 98 ஏரிகள் நிரம்பி உள்ளன.
காஞ்சீபுரம்:

ஏரிகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக 2 பெரிய ஏரிகள் உள்பட 98 ஏரிகள் நிரம்பி உள்ளன. இது குறித்து பொது பணிதுறை அதிகாரிகள் கூறியதாவது:-

காஞ்சீபுரம் பொதுப்பணிதுறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுபணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 98 ஏரிகள் 100 சதவீதமும், 136 ஏரிகள் 75 சதவீதமும், 149 ஏரிகள் 50 சதவீதமும், 570 ஏரிகள் இதற்கு குறைவாகவும் நிரம்பி உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Similar News