செய்திகள்

வடபழனி கோவில் அருகே செருப்பு பாதுகாக்கும் அறையில் தூக்கில் வாலிபர் பிணம்

Published On 2017-10-28 15:12 IST   |   Update On 2017-10-28 15:12:00 IST
வடபழனி கோவில் அருகே தனியார் காலணிகள் பாதுகாப்பு அறையில் மர்மமான முறையில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:

வடபழனி முருகன் கோவில் அருகே தனியார் காலணிகள் பாதுகாக்கும் அறை உள்ளது. இன்று காலை ஊழியர் திறந்து பார்த்தபோது உள்ளே ஊனமுற்ற வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாலிபர் உடலை மீட்டு ராயபேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர் திருவொற்றியூரை சேர்ந்த ராஜேஷ் என்பதும், கோவில் வாசலில் தங்கி பிச்சை எடுத்து வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

Similar News