செய்திகள்
ராஜேஸ்வரி

புவனகிரி அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் தபால் ஊழியர் பலி

Published On 2017-10-26 15:48 IST   |   Update On 2017-10-26 15:49:00 IST
புவனகிரி அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் தபால் ஊழியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநல்லூரை சேர்ந்தவர் பாலசந்தர். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 35). இவர் புவனகிரியில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்த போது, அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ராஜேஸ்வரியை மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News