செய்திகள்

கடலூர் டான்பாக் தொழிற்சாலையில் கூலிதொழிலாளி மர்ம மரணம்: தாசில்தார் விசாரணை

Published On 2017-10-25 16:59 IST   |   Update On 2017-10-25 16:59:00 IST
டான்பாக் தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கூலிதொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து அங்கு இருந்த ஊழியர்களிடம் தாசில்தார் விசாரணை நடத்தினார்.

கடலூர்:

கடலூர் சிப்காட் வளாகத்தில் டான்பாக் தொழிற்சாலை உள்ளது. இங்கு கடலூர் பச்சையாங்குப்பத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 50) என்பவர் கூலி வேலை செய்து வந்தார்.

நேற்று இரவு அவர் வேலைக்கு சென்றார். நள்ளிரவு திடீரென்று நாகராஜ் மயங்கி கீழே விழுந்தார். உடனே அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த மற்ற ஊழியர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தனர்.

புகாரில் நாகராஜ் சாவில் மர்மம் உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்கள்.

இதையொட்டி கடலூர் தாசில்தார் பாலமுருகன், டான்பாக்தொழிற் சாலைக்கு நேரில் சென்றார். நாகராஜ் சாவு தொடர்பாக அங்கு இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.

மேலும் நாகராஜ் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களிடமும் விசாரணை நடத்தினார்.

Similar News