செய்திகள்

புதுக்கோட்டையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்

Published On 2017-10-22 14:31 GMT   |   Update On 2017-10-22 14:31 GMT
புதுக்கோட்டையில் டெங்கு விழிப்புணர்வு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை:

சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச்சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் மாவட்ட சித்த மருத்துவ கழகம் சார்பில் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்கத்தலைவர் மாருதி மோகன்ராஜ் தலைமையில் புதுக்கோட்டை 3ம் வீதி பெருமாள் கோவில் மார்க்கெட் அருகில் டெங்கு விழிப்புணர்வு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

முகாமில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் பார்த்திபன், நகர் மன்ற முன்னாள் துணைத் தலைவர் நைனாமுகம்மது, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் ஆறுமுகம், காப் பீடு திட்ட மாவட்ட அலுவலர் சாமிநாதன், மெஸ் மூர்த்தி முன்னிலை வகித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார்.

முகாமில் பிரசாத், யோகா பாண்டியன், அசோகன், சுப்பையா, வக்கீல் குஞ்சிதபாதம், ராதாகிருஷ்ணன், சிவலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News