செய்திகள்

வேதாரண்யம் பகுதிகளில் கடல் சீற்றம்: 3 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

Published On 2017-10-21 10:44 GMT   |   Update On 2017-10-21 10:44 GMT
வேதாரண்யம் பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இன்று காலை கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் கடல் சீற்றத்துடன் தண்ணீர் பல அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து கரையை நோக்கி வந்தது.

இதனால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. கரையோரத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதேபோல் கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம் ஆகிய பகுதிகளிலும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் இன்று செல்லவில்லை.

இதுபற்றி வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கூறியதாவது:-

வேதாரண்யம் பகுதியில் நேற்று இரவு கடலுக்கு சென்றவர்கள் வீடடு திரும்பி விட்டனர். இன்று காலை 9 மணி முதல் சூறாவளி காற்று போல் வீசி வருகிறது. இதனால் கடல் சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் காலை 11 மணி முதல் மீன்பிடிக்கவில்லை. இயல்பு நிலை திரும்பிய பிறகே கடலுக்கு புறப்படுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News