செய்திகள்
வேதாரண்யம் பகுதிகளில் கடல் சீற்றம்: 3 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
வேதாரண்யம் பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இன்று காலை கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் கடல் சீற்றத்துடன் தண்ணீர் பல அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து கரையை நோக்கி வந்தது.
இதனால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. கரையோரத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதேபோல் கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம் ஆகிய பகுதிகளிலும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் இன்று செல்லவில்லை.
இதுபற்றி வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கூறியதாவது:-
வேதாரண்யம் பகுதியில் நேற்று இரவு கடலுக்கு சென்றவர்கள் வீடடு திரும்பி விட்டனர். இன்று காலை 9 மணி முதல் சூறாவளி காற்று போல் வீசி வருகிறது. இதனால் கடல் சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் காலை 11 மணி முதல் மீன்பிடிக்கவில்லை. இயல்பு நிலை திரும்பிய பிறகே கடலுக்கு புறப்படுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இன்று காலை கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் கடல் சீற்றத்துடன் தண்ணீர் பல அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து கரையை நோக்கி வந்தது.
இதனால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. கரையோரத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதேபோல் கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம் ஆகிய பகுதிகளிலும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் இன்று செல்லவில்லை.
இதுபற்றி வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கூறியதாவது:-
வேதாரண்யம் பகுதியில் நேற்று இரவு கடலுக்கு சென்றவர்கள் வீடடு திரும்பி விட்டனர். இன்று காலை 9 மணி முதல் சூறாவளி காற்று போல் வீசி வருகிறது. இதனால் கடல் சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் காலை 11 மணி முதல் மீன்பிடிக்கவில்லை. இயல்பு நிலை திரும்பிய பிறகே கடலுக்கு புறப்படுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.