வேதாரண்யத்தில் இலங்கை வாலிபர் கைது
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த பெரியகுத்தகை பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒருவரை வேதாரண்யம் போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் இலங்கை, யாழ்பாணம் பகுதி பருத்திதுறை மார்கண்ட் மகன் சீறீமுருகன் (32) என்பது தெரியவந்தது.
அவர் எப்படி இங்கு வந்தார்? அவரிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் படகு மூலம் வந்தாரா? மேலும் இவருடன் யாரும் கூட வந்தார்களா? என்று வேதாரண்யம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கணேசன் (50), குரவப்புலம் சரஸ்வதி, கருப்பம்புலம் பக்கிரிசாமி ஆகிய 3 கூரை வீடுகளும் தீபாவளியன்று வெடி வெடித்ததில் தீபிடித்து எரிய தொடங்கியது.
அக்கம் பக்கத்தினரும், வேதாரண்யம் தீயணைப்புத் துறை அலுவலர் சம்பத் தலைமையிலான குழுவினர் சென்று தீயை அணைத்தனர். தாசில்தார் விஜயகுமார் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, அரசின் நிவாரண தொகை வழங்கினார்.