செய்திகள்

நாகை அருகே வாலிபர் அடித்து கொலை

Published On 2017-10-20 16:58 IST   |   Update On 2017-10-20 16:58:00 IST
நாகை அருகே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த் சம்பவம் நாகூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம்:

நாகையை அடுத்த நாகூர் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சிவா என்கிற சிவசங்கர் (வயது 19).

நேற்று வீட்டை விட்டு சென்ற சிவசங்கர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய்,சிவசங்கரை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.

இந்த நிலையில் நாகூர் தங்கச்சிமடம் பகுதியில் சிவசங்கர் முகம் சிதைக்கப்பட்டு நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் நாகூர் போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ் பெக்டர் குலோத் துங்கன் விரைந்து சென்று சிவசங்கர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வாலிபர் சிவசங்கரை மர்ம கும்பல் முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News