செய்திகள்

வேதாரண்யம் அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2017-10-15 22:59 IST   |   Update On 2017-10-15 22:59:00 IST
வேதாரண்யம் அருகே மகளுக்கு தீபாவளி சீர் கொடுக்க முடியாததால் வேதனை அடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள உம்பளச்சேரியை சேர்ந்தவர் சச்சிதானந்தம் (வயது 55) கூலி தொழிலாளி. இவரது மனைவி முருகம்மாள் இவர்களது மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவருக்கு தீபாவளிக்கு சீர் கொடுப்பது சம்பந்தமாக கணவன்- மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மகளுக்கு சீர் செய்ய போதிய பணம் இல்லாதால் மனவேதனை அடைந்த சச்சிதானந்தம் கடந்த 8-ந் தேதி வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் திருவாரூர் மருத்துவக் கல்லூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கரியாபட்டினம் சப்- இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News