செய்திகள்

தே.மு.தி.க. சார்பில் அறந்தாங்கியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்

Published On 2017-10-12 18:26 IST   |   Update On 2017-10-12 18:26:00 IST
பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க அறந்தாங்கி நகர, ஒன்றிய தே.மு.தி.க சார்பில் அறந்தாங்கி பஸ் நிலையம் அருகே நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
அறந்தாங்கி:

பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க அறந்தாங்கி நகர, ஒன்றிய தே.மு.தி.க சார்பில் அறந்தாங்கி பஸ் நிலையம் அருகே நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க நகரச் செயலாளர் மணி காந்த் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமசாமி கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகர நிர்வாகி ஆனந்த், ஒன்றிய நிர்வாகி நாராயணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News