செய்திகள்

ஆலவயல் அரசு மேல்நிலை பள்ளியில் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

Published On 2017-10-10 14:37 GMT   |   Update On 2017-10-10 14:37 GMT
பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு ஒழிப்பு தினம் மற்றும் டெங்கு ஒழிப்பு உறுதிமொழியேற்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பொன்னமராவதி:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு ஒழிப்பு தினம் மற்றும் டெங்கு ஒழிப்பு உறுதிமொழியேற்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் விதம், அதன் அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வுடன் பள்ளி மாணவ, மானவிகளுக்கு எடுத்துரைக்கபட்டது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகரா ஜன் தலைமை தாங்கினார்.

இதில் சுகாதார அலுவலர் திருஞானம் சுகாதார கருத்துகள் கொண்ட உறுதி மொழியை மாணவர்களுக்கு எடுத்து கூறினார். அதனை தொடர்ந்து  மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இறுதியில் பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News