செய்திகள்

வேதாரண்யத்தில் கடல் சீற்றம்: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

Published On 2017-09-30 13:30 GMT   |   Update On 2017-09-30 13:30 GMT
வேதாரண்யத்தில் இன்று கடல் சீற்றம் காரணமாக 1500 மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. அவர்களது படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் முக்கிய தொழிலாக மீன்பிடித் தொழில் உள்ளது. நூற்றுக் கணக்கான விசை படகு மற்றும் பைபர் படகுகளில் சென்று தினமும் மீன்பிடித்து வருவார்கள்.

இந்த நிலையில் இன்று கடல் சீற்றமாக உள்ளதால் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 1500 மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

அவர்களது படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News